உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கோவை செல்லும் ரயில்களுக்கு திருவள்ளூரில் நிறுத்தம் தேவை

 கோவை செல்லும் ரயில்களுக்கு திருவள்ளூரில் நிறுத்தம் தேவை

சென்னை: 'சென்னை - கோவை, பெங்களூரு செல்லும் விரைவு ரயில்களுக்கு, திருவள்ளூரில் நிறுத்தம் வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையை அடுத்து முக்கிய ரயில் நிலையமாக, திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் தினமும், 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் கடந்து செல்கின்றன. ஆனால், பெரும்பாலான விரைவு ரயில்களும் நின்று செல்வதில்லை. இதனால், கோவை, பெங்களூருக்கு செல்வோரும், சென்ட்ரலுக்கு சென்று ரயிலில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவ ட்ட பயணியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் 60 விரைவு ரயில்களில், மங்களூர் மெயில், ஆலப்புழா, காவேரி, திருப்பதி, மும்பை, மைசூர் உள்ளிட் ட 11 விரைவு ரயில்கள் மட்டும் நின்று செல்கின்றன. இந்த தடத்தில் அதிகம் பேர் பயணம் செய்யும் கோவை, பெங்களூர் செல்லும் விரைவு ரயில்களுக்காவது நிறுத்தம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ