உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

நாளை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை, சென்னை குடிநீர் வாரியத்தின் மக்கள் குறைதீர் கூட்டம், 14ம்தேதியான நாளை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மண்டலங்களில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், குடிநீர், கழிவுநீர் தொடர்பான நீண்ட நாள் பிரச்னை, வரி, கட்டணம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மனு கொடுத்து தீர்வு காணலாம். மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை