மண்டலங்களில் நாளை குடிநீர் குறைதீர் கூட்டம்
சென்னை; சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மக்கள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மக்கள் குறைதீர் கூட்டம், நாளை காலை 10:00 முதல் 1:00 மணி வரை, அந்தந்த மண்டல குடிநீர் வாரிய அலுவலகங்களில் நடைபெறும். குடிநீர், கழிவுநீர் இணைப்பு பிரச்னைகள், வரி, கட்டணம் குறித்த புகார்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு, இம்முகாமில் பங்கேற்று புகார் அளிக்கலாம்; விரைந்து தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் கூறினர்.