உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு

ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு

சென்னை, நவ. 12-குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். மாநகராட்சி போல் குடிநீர் வாரியமும், 5 சதவீதம் ஊக்கத்தொகை அறிவித்தது.அதன்படி, நிலுவை இல்லாமல், அக்டோபரில் வரி செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் அல்லது 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், அக்டோபரில், 103 கோடி ரூபாய் வசூலானது. அதுவே, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கிய, 2024 - 25ல் அக்டோபரில், 170 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதன் காரணமாக, ஆண்டு வரி வருவாயும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ