குட்கா விற்ற பெண் கைது
கொடுங்கையூர், கொடுங்கையூரில் குட்கா விற்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 45வது தெருவைச் சேர்ந்த கோமதி, 31, என்பவரை குட்கா விற்ற வழக்கில் கொடுங்கையூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவான விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.