கமிஷனர் அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின், மூன்றாவது நுழைவாயில் அருகே, நேற்று மதியம், வியாசர்பாடியைச் சேர்ந்த திவ்யா, 3, என்பவர், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார்.அவரை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். பின், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, அவர் கூறியதாவது:வியாசர்பாடி மல்லிப்பூ காலனி 'இ' பிளாக்கில், கணவர் தினேஷ்பாபுவுடன் வசிக்கிறேன். என் கணவரை, குற்றவாளியாக மாற்ற போலீசார் முயற்சி செய்கின்றனர். முன்பு அவர் குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும், தற்போது திருந்து வாழ்கிறார். எந்த குற்றத்திலும் அவர் ஈடுபடுவதில்லை. அவர் மீது வழக்கு போடுவதை, உயர் அதிகாரிகள் நிறுத்த வேண்டும்.இவ்வாறு திவ்யா கூறினர்.திவ்யாவை, அவரது கணவருடன் சமாதானம் செய்து, போலீசார் அனுப்பி வைத்தனர்.ஏற்கனவே திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலும், போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர் என, முதல்வர் வீட்டிற்கு அருகே பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.