பிரியாணி சாப்பிட்ட வாலிபர் அட்மிட்
பூக்கடை, நடைபாதை கடையில், பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 21; சென்னை, பார்க் டவுன், ராசப்பா செட்டி தெருவில் தங்கி, டிரான்ஸ்போர்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, விடுமுறை தினம் என்பதால், பூக்கடை, ரத்தன் பஜாரில் உள்ள நடைபாதை பிரியாணி கடை ஒன்றில், பீப் பிரியாணி சாப்பிட்டுள்ளார். ஒரு மணி நேரத்தில், பெரியசாமிக்கு தோலில் அலர்ஜி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்லி விழுந்த உணவு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் - வடகால் சிப்காட்டில் 'லயசன் இன்க்' என்ற கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள கேன்டீனில், நேற்று காலை உணவை 30 பேர் சாப்பிட்டனர். அப்போது, சாம்பாரில் பல்லி இருந்தது தெரிந்தது. 30 தொழிலாளர்கள், வல்லக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டனர். ஐந்து பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மற்றவர்கள் பணிக்கு திரும்பினர்.