உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 125 கிலோ குட்கா பறிமுதல்; இருவர் கைது

125 கிலோ குட்கா பறிமுதல்; இருவர் கைது

கோவை:கோவை, சாய்பாபா காலனி போலீசார் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பகுதியில் ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில் இருந்த வீரபாண்டியை சேர்ந்த ஜெயகுமார், 43 மற்றும் டவுன்ஹால் பகுதியை சேர்ந்த ஜவகர், 24 ஆகியோரிடம் விசாரித்ததில் அவர்கள் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 125 கிலோ குட்கா மற்றும் மினி டெம்போ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை