28வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி துவக்கம்
கோவை: கோவையில் நடக்கும், 28வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியின் முதல் சுற்றில் தெலுங்கானாவை சேர்ந்த துருவ் தோட்டா, 1 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார்.தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 26வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, அலங்கார் ஓட்டலில் கடந்த மாதம், 30 முதல் கடந்த, 5ம் தேதி வரை நடந்தது.இந்தியாவின் பார்கன்கர் அக் ஷய்வெற்றி பெற்றார்.தொடர்ந்து, 27வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி அதே ஓட்டலில் கடந்த, 7 முதல், 13ம் தேதி வரை நடந்தது. நிறைவில், பெலாரஸ் நாட்டை சேர்ந்த எவ்ஜெனி பொடோல்சென்கோ வெற்றி பெற்றார்.இதையடுத்து, 28வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது; வரும், 21ம் தேதி நிறைவடைகிறது. போட்டியை, தமிழ்நாடு மாநில சதுரங்க சங்க தலைவர் மாணிக்கம் துவக்கிவைத்தார்.இப்போட்டியில், பெலாரஸ் நாட்டின் எவ்ஜெனி பொடோல்சென்கோ, ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த வாகிடோவ் டாயிர், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி, ரஷ்யாவின் கோசெலாக் ஷ்வி டேவிட் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பாலா(தெலுங்கானா), துருவ் தோட்டா (தெலுங்கானா), தமிழகத்தை சேர்ந்த தினேஷ் ராஜன், ஆகாஷ், தேஜாஸ்வின் என, 10 பேர் பங்கேற்றனர்.முதல் சுற்றில், தெலுங்கானாவை சேர்ந்த ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பாலா மற்றும் பெலாரஸ் நாட்டின் எவ்ஜெனி பொடோல்சென்கோ ஆகியோருக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது; இருவரும் தலா, 0.5 புள்ளிகள் பெற்றனர்.தமிழகத்தை சேர்ந்த ஆகாஷ் மற்றும் ரஷ்யாவின் கோசெலாக் ஷ்வி டேவிட் ஆகியோருக்கு இடையேயான போட்டியும் சமனில் முடிய, இருவரும் தலா, 0.5 புள்ளிகள் பெற்றனர். தெலுங்கானாவை சேர்ந்த துருவ் தோட்டா, தமிழகத்தை சேர்ந்த தேஜாஸ்வினை வென்று, 1 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார்.தமிழகத்தை சேர்ந்த தினேஷ் ராஜன் மற்றும் ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ் இடையேயான போட்டி சமனில் முடிய, இருவரும் தலா, 0.5 புள்ளிகள் பெற்றனர். துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி மற்றும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த வாகிடோவ் டாயிர் இடையேயான போட்டியும் சமனில் முடிய இருவரும் தலா, 0.5 புள்ளிகள் பெற்றனர். தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.