உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனி நபர் இல்லங்களில் பராமரிக்கும் சிறந்த நுாலகத்துக்கு காத்திருக்கு பரிசு  

தனி நபர் இல்லங்களில் பராமரிக்கும் சிறந்த நுாலகத்துக்கு காத்திருக்கு பரிசு  

கோவை:கோவை மாவட்டத்தில், தனி நபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நுாலகத்துக்கு பரிசு வழங்கப்படும். அதற்கு விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நுாலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நுாலகங்களுக்கு விருது வழங்கப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்திருந்தார். கோவையில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நுாலகங்களில், மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நுாலகத்தை தேர்ந்தெடுத்து, ரூ.3,000 மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.தங்களது இல்லத்தில் நுாலகம் அமைத்து பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள், தங்களது நுாலகத்தில் உள்ள நுால்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நுால்கள் மற்றும் அரிய நுால்கள் ஏதேனும் இருப்பின் அதைபற்றிய விபரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்படுகிறது என்கிற விபரம், தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன், செப்., 30க்குள் மாவட்ட நுாலக அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மாவட்ட நுாலக அலுவலர், 1232 பெரிய கடை வீதி, கோவை-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அல்லது, gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது, அருகாமையில் உள்ள பொது நுாலக இயக்கக நுாலகத்தில் நேரில் விண்ணப்பம் கொடுக்கலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ