மேலும் செய்திகள்
தோலம்பாளையத்தில் யானைகள் அட்டகாசம்
10-Feb-2025
தோலம்பாளையத்தில் யானைகள் அட்டகாசம்
10-Feb-2025
மேட்டுப்பாளையம்; உணவு தேடி வனத்தில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என மேட்டுப்பாளையம் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை வழியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தினமும் பல நுாறு பயணிகள் சுற்றுலா செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் உள்ள இடங்களில் ஓய்வு எடுக்கவும், உணவு சாப்பிடவும் வாகனங்களை நிறுத்துகின்றனர். சிலர் சாலையோரம் சுற்றி திரியும் குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பார்க்க வாகனங்களை நிறுத்துகின்றனர். பின் வனவிலங்குகளுக்கு உணவளிக்க முயல்கின்றனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், ''வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதால் அவை சாலை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலைகளில் மெதுவாக செல்ல வேண்டும்.வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பது சட்டப்படி குற்றம்,'' என்றனர்.
10-Feb-2025
10-Feb-2025