உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் திருவிழா கோலாகலம்; வரும் 8ல் அலகு பூட்டி ஊர்வலம்

கோவில்களில் திருவிழா கோலாகலம்; வரும் 8ல் அலகு பூட்டி ஊர்வலம்

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் இரண்டாம் பிரிவில், விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவிலின், 62வது ஆண்டு திருவிழா, கடந்த, 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக, காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது.வரும், 7ம் தேதி இரவு, 8:30 மணிக்கு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, அம்மன் ஆபரண பெட்டியுடன் ஆற்றங்கரைக்கு சென்று, இரவு 12:00 மணிக்கு சக்தி கரகம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 8ம் தேதி காலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரபூஜை நடக்கிறது. அதன்பின், 11:00 மணிக்கு பக்தர்கள் அலகு பூட்டி கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். 9ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.* வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு சக்திமாரியம்மன் கோவிலின், 73ம் ஆண்டு திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு அம்மன் கரகம் பாலித்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்.வரும், 8ம் தேதி காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. அதன்பின், பக்தர்கள் அலகு பூட்டியும், பூவோடு எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை