உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு குண்டாஸ்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு குண்டாஸ்

கோவை;சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.கோவை சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், சூலுார் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 40, என்பவரை கருமத்தம்பட்டி மகளிர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். அவ்வுத்தரவின்படி சிவகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி