உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவோயிஸ்ட் உண்ணாவிரதம்? மத்திய சிறை நிர்வாகம் மறுப்பு

மாவோயிஸ்ட் உண்ணாவிரதம்? மத்திய சிறை நிர்வாகம் மறுப்பு

கோவை:கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் பரவிவருகிறது.கோவை மத்திய சிறையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மாவோயிஸ்ட் அனுப் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அனுப் அளித்த புகார் மனுவை, சிறை அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அனுப்பவில்லை எனக்கூறி, அனுப் உண்ணாவிரதம் இருந்து வருவதாக, தகவல் பரவி வருகிறது.மத்திய சிறை எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்டபோது, ''அனுப் உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படும் தகவல் தவறானது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்