உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 5 ஆண்டு சிறை

கோவை : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை மாநகர பகுதியில் வசித்து வருபவர் மோகன்,60. கூலி தொழிலாளியான இவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். புகாரின் பேரில், கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார், கடந்த 2022, அக்., 5ல், மோகனை கைது செய்தனர்.அவர் மீது, கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட மோகனுக்கு, ஐந்தாண்டு சிறை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ