உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சார் - பதிவாளர் அலுவலகத்தில் பணம் அதிக அளவில் கை மாறுகிறது என, தகவல் கிடைத்ததன் படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5:30 மணிக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல், விசாரணை நடத்தினர். இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி கூறியதாவது:சார் - பதிவாளர் அலுவலகத்தில் பணம் பரிமாற்றம் நடந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. எனினும், சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை நடத்தி வருகிறோம். அலுவலகத்தில் சோதனை நடக்கிறது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை