உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்களுக்கு மிரட்டல் வாலிபர் கைது

பெண்களுக்கு மிரட்டல் வாலிபர் கைது

சூலுார்; சூலுார் அடுத்த கலங்கலை சேர்ந்தவர் ஷீபா,44. கணவரை பிரிந்து வசிக்கிறார். இவருடைய தங்கை ஜன்னத் பாத்திமா. இவர் செல்வபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சூலுார் அடுத்த புது நகரில் வசிக்கும் இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன் கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற ஷீபா, அவரது தாய் ஆகியோர் சுரேஷை கண்டித்துள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், மூவரையும் தகாத வார்த்தைகளில் பேசிய மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சூலூர் போலீசில் ஷீபா புகார் அளித்தார். போலீசார், சுரேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !