உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு கி.மீ.,க்கு ரோடு சீரமைக்க 10 ஆண்டுகளாக போராட்டம்

ஒரு கி.மீ.,க்கு ரோடு சீரமைக்க 10 ஆண்டுகளாக போராட்டம்

வால்பாறை : ஒரு கி.மீ., துாரம் உள்ள ஈட்டியார் எஸ்டேட் ரோட்டை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை நகரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஈட்டியார் எஸ்டேட். இங்குள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் பொங்கல் விழாவில், மாடன்வேட்டைக்கு செல்லும் நிகழ்வின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.ஈட்டியார் எஸ்டேட் வழியாக கோவிலுக்கு செல்லும் ரோடு, கடந்த, 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கரடு, முரடாக உள்ளது. இதனால், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட சென்று வர முடியாத நிலை உள்ளது.தொழிலாளர்கள் கூறியதாவது:வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த ஈட்டியார் எஸ்டேட் பகுதியில், ஒரு கி.மீ., துாரத்துக்கு ரோட்டை சீரமைக்க வேண்டும். இதற்காக, கடந்த, 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. மக்கள் பிரதிநிதிகள் ஓட்டு கேட்க மட்டும் வந்து செல்கின்றனர். வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதி ரோடுகளை நகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. அதேபோன்று, ஈட்டியார் எஸ்டேட் ரோட்டையும், நகராட்சி சார்பில் மழை காலத்துக்கு முன் சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ