உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டத்தில் 300 கார்டுதாரர்  குறைகள்   தீர்ப்பு 

கோவை மாவட்டத்தில் 300 கார்டுதாரர்  குறைகள்   தீர்ப்பு 

கோவை, : கோவையில் நடந்த ரேஷன் கார்டுதாரர் குறை தீர்ப்பு முகாமில், 300 கார்டுதாரர்கள் புகார் மனுக்கள் சரி செய்யப்பட்டன.கோவை மாவட்டத்தில் உள்ள, 11 தாலுகா அலுவலகங்களில் செயல்படும் வழங்கல் அலுவலகத்தில் மாதம் தோறும்பொது விநியோக திட்டங்களுக்கான குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதில் ரேஷன்கார்டில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், நகல் அட்டை பெறுதல், தொலைபேசி எண் சேர்த்தல், குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்தம் சம்பந்தமான மனுக்கள் ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து பெறப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.இந்த மாதம் நடந்த முகாமில், 300 கார்டுதாரர்கள் பங்கேற்று திருத்த மனுக்கள் அளித்தனர்.கார்டுதாரர்கள் கோரிய திருத்தங்கள் மற்றும் விபரங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.இந்த தகவலை மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ