உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 7 பேருக்கு டெங்கு பாதிப்பு கொசு மருந்து தெளிப்பு தீவிரம்

7 பேருக்கு டெங்கு பாதிப்பு கொசு மருந்து தெளிப்பு தீவிரம்

வால்பாறை, ; வால்பாறை நகரில், டெங்கு காய்ச்சலால் ஏழு பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப்பகுதியில் நகராட்சி சார்பில் கொசு ஒழிப்புக்கு புகை மருந்து தெளிக்கப்பட்டது.வால்பாறை நகரில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இது தவிர தங்கும் விடுதிகளும் அதிக அளவில் உள்ளன. மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறையில் தற்போது பருவமழை பெய்யும் நிலையில், நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் கடந்த ஒரு மாதத்தில் ஏழு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, வைரஸ் காய்ச்சலால் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.இதனையடுத்து, வால்பாறை நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், களப்பணியாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், துாய்மை பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் பரவிய குடியிருப்பு பகுதி முழுவதிலும் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வசிக்கும் வீடுகளின் அருகில், தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.குடிநீர் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிநீரை நன்கு காய்ச்சிய பின் குடிக்க வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவியபின் உணவு அருந்த வேண்டும். கொசு ஒழிப்புக்கு, மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ