உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக பரிசோதனை அவசியம்

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக பரிசோதனை அவசியம்

கே.எம்.சி.எச்.,ல், வரும் 31ம் தேதி வரை நடக்கும் முகாமில், பெண்களுக்கான மார்பக பரிசோதனை, சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மார்பகபுற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர் ரூபா, டாக்டர் பிரேமா கூறியதாவது:மார்பகங்களில் வலி, கட்டி, அக்குள்களில் வீக்கம் போன்ற அறிகுறிகளில் ஏதாவதொன்று இருந்தாலோ, ரத்த சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்று நோய் இருத்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.அறிகுறிகள் இல்லையென்றாலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். பெண்கள் தங்களது சுய பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை, மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத சாதாரண கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால், சிரமங்களை தவிர்க்கலாம்.மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் நவீன சிகிச்சை கே.எம்.சி.எச்.,ல் அளிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து வசதிகளும் இங்குள்ளது. மேமோகிராம் பரிசோதனை கருவி, அல்ட்ராசோனோகிராபி இயந்திரம், 3டி எம்.ஆர்.ஐ., வேக்குவம் அசிஸ்டட் பயாப்சி ஆகியவையும் இங்குள்ளது.உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் முன்னிட்டு, கே.எம்.சி.எச்.,ல் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம், வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதில், ரூ.3,750 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.1,200க்கும், ரூ.1,200 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.600க்கும் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவவரின் ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படுகிறது.முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 98940 08800, 0422 432 4151 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ