உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூரிக்கட்டையால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி

பூரிக்கட்டையால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி

பெ.நா.பாளையம்,:கோவை, இடிகரை, ராமானுஜர் வீதியில் வசித்தவர் நந்தகுமார், 33, கோழிக்கடை ஊழியர். இவரின் மனைவி சஹானா பேகம், 30. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று ஏற்பட்ட தகராறில், நந்தகுமார், சஹானா பேகத்தை அடித்தார். மனைவியும் திருப்பி, அவரை பூரிக்கட்டையால் அடித்தார். நந்தகுமாருக்கு தலை மற்றும் நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவர், கோழிக்கடையில் இறந்தார்.நந்தகுமாரின் உடல், அவருடைய சொந்த ஊரான கிணத்துக்கடவு, எஸ்.மேட்டுப்பாளையம், இந்திரா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நந்தகுமாரின் உறவினர்கள், உடலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார், நந்தகுமாரின் மனைவி சஹானா பேகத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ