உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாலகத்துக்கு கூடுதல் கட்டடம்

நுாலகத்துக்கு கூடுதல் கட்டடம்

அன்னுார்; அன்னுாரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் போதுமான இட வசதி இல்லாததால் வாசகர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.மேலும் இந்த நூலகத்தில் டிஜிட்டல் லைப்ரரி ஏற்படுத்த வேண்டும். கூடுதலாக கணினிகள் பொருத்த வேண்டும் என வாசகர்கள் கோரி வந்தன.இந்நிலையில் இங்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது. 'இதனால் அதிக இட வசதி கிடைக்கும்' என்பதால் வாசகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை