மாயாண்டிஸ்வரர் கோவிலில் நவ. 5ம் தேதி ஆண்டு விழா
நெகமம்: நெகமம், கப்பளாங்கரை மாயாண்டிஸ்வரர் கோவிலில், அடுத்த மாதம் 5ம் தேதி ஆண்டு விழா நடக்கிறது. நெகமம், கப்பளாங்கரை மரகதாம்பிகை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவிலில், அடுத்த மாதம் 5ம் தேதி, மூன்றாம் ஆண்டு விழா மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. இதில், காலை, 9:00 மணிக்கு, வேள்வி வழிபாடும், காலை, 10:30 மணிக்கு, திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. காலை, 11:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.