உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து அதிகம் விற்பனை விலையும் உயர்வு

வாழைத்தார் வரத்து அதிகம் விற்பனை விலையும் உயர்வு

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், செவ்வாழை கிலோ - 75, நேந்திரன் --- 50, ரஸ்தாளி --- 50, பூவன் --- 40, கதளி --- 35, சாம்பிராணி --- 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட, தற்போது பூவன் கிலோவுக்கு இரண்டு ரூபாய், நேந்திரன் மற்றும் ரஸ்தாளி கிலோவுக்கு 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. சாம்பிராணி வகை வாழைத்தார் மட்டும் கிலோவுக்கு, 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் கடந்த இரண்டு வாரத்தை விட, தற்போது வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் செவ்வாழை வரத்து இல்லை. இந்த வாரம், வாழைத்தார் வரத்து அதிகரித்த நிலையில், விலையும் உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் கூடுதல் வாழைத்தார்கள் வரத்து இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ