ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா
கோவை; தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை, செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அதில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பின்பக்கம், கேட்பாரற்று கிடந்த, ஒரு கவரை பார்த்தனர். அதில், 5.5 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.