உறவினரை தாக்கிய மூவர் மீது வழக்கு
போத்தனூர்: போத்தனூர் அடுத்த அண்ணாபுரம், ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் ஜோஸப் , 65. க டந்த 8ல் சுந்தராபுரம், டீச்சர்ஸ் காலனியிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் அமலா, ஜெனி மற்றும் அவரது மனைவியின் சகோதரியின் மகள் சேர்ந்து அவரை திட்டினர். அப்போது அதிரூபன் என்பவரும் வந்து அவர்களுடன் சேர்ந்து திட்டி தாக்கினார். காயமடைந்த ஜோஸப், அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது புகாரில், சுந்தராபு ரம் போலீசார் விசாரிக்கின்றனர்.