உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லேசான மழைக்கு வாய்ப்பு: காலநிலை மையம் தகவல்

லேசான மழைக்கு வாய்ப்பு: காலநிலை மையம் தகவல்

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் வரும் மூன்று நாட்களுக்கு லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கோவை வேளாண் பல்கலை, காலநிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கைவருமாறு: அடுத்த மூன்று நாட்களுக்கு கோவைமாவட்டத்தில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானசாரல்மழையை எதிர்பார்க்கலாம். தென்மேற்கு பருவக்காற்று வீசும். சம்பா நெல்லுக்கு பரிந்துரைக்கப்பட்ட மேலுரம் இடவும். மழையில்லா நாட்களில், கொண்டைக்கடலை மற்றும் கொத்தமல்லி விதைக்க, நிலம் தயார் செய்யலாம். பருத்தியில் தயிர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மஞ்சளில் வேர், கிழங்கு அழுகலைத் தவிர்க்க வடிகால் வசதி செய்து, லிட்டருக்கு 5 மில்லி பேசில்லஸ் சப்டில்லஸ் நீரில் கரைத்து வேருக்கு அருகில் ஊற்றவும். மழை பொழிவை பொறுத்து, உரமிடல், மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி