உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு மிக எளிது; மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு மிக எளிது; மாணவர்கள் மகிழ்ச்சி

அன்னுார்; 'பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு எளிதாக இருந்தது,' என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. நேற்று ஆங்கில பாட தேர்வு நடந்தது.அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆங்கில தேர்வு மிக எளிது

பிரதிக் ஷா, நல்லிசெட்டிபாளையம்: ஆங்கில தேர்வு மிக எளிதாக இருந்தது. 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண், எட்டு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன

அதிக மதிப்பெண் பெற முடியும்

மணிகண்டன், கெம்பநாயக்கன்பாளையம்: பெரும்பாலான கேள்விகள் ஆசிரியர் தெரிவித்ததில் இருந்து வந்திருந்தது. மாதிரி வினாத்தாளிலிருந்து பல கேள்விகள் வந்திருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும். தமிழ் தேர்வை போல ஆங்கிலத் தேர்வும் எளிதாக இருந்தது.

இரண்டு மதிப்பெண் கேள்விகள் கடினம்

ஸ்டான்லி, சொக்கம்பாளையம்: ஆங்கில பாடத் தேர்வில் இரண்டு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் மற்றும் எட்டு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன.எளிதில் தேர்ச்சி பெறலாம். ஆனால் அதிக மதிப்பெண் பெற முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !