சுத்தமானது குழந்தைகள் விளையாடும் இடம்
கோவை: கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், குழந்தைகள் விளையாடும் இடம், 'தினமலர்' செய்தி காரணமாக, சுத்தம் செய்யப்பட்டது.சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், குழந்தைகள் விளையாடும் பகுதி முறையாக சுத்தம் செய்யப்படாத நிலையில் இருந்தது. புற்கள் அதிகமாக முளைத்து, இடம் முழுவதும் புதர் மண்டியிருந்ததால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது.இதுகுறித்து நேற்றைய (ஜூன் 7) நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் விளையாடும் இடம், சுத்தம் செய்யப்பட்டது.