உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - மடார் வாராந்திர சிறப்பு ரயில்

கோவை - மடார் வாராந்திர சிறப்பு ரயில்

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவை - மடார்(ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கோவை - மடார்(06181) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில், வரும், 13 முதல் டிச., 4ம் தேதி வரை வியாழன் அதிகாலை 2:30 மணிக்கு, கோவையில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை 11:20 மணிக்கு மடார் சென்றடையும். மடார் - கோவை (06182) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில், வரும், 16 முதல் டிச., 7ம் தேதி வரை ஞாயிறு இரவு 11:50 மணிக்கு மடாரில் இருந்து புறப்பட்டு, புதன் கிழமை காலை 8:30 மணிக்கு கோவை வந்தடையும். ஏ.சி., மூன்றடுக்கு, மூன்றடுக்கு எகானமி, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, கடப்பா, எர்ரகுண்டா, கூட்டி, தோன், குர்னுல், காட்வால், மஹபூப் நகர், நிஜாமாபாத், பசார் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில், நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை