உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையில்லா போகி பண்டிகை கோவை கலெக்டர் வேண்டுகோள்

புகையில்லா போகி பண்டிகை கோவை கலெக்டர் வேண்டுகோள்

கோவை: காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்க, புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட, கோவை கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடினர். தற்போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயணம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.அதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு, விபத்துக்கு காரணமாகிறது. விமானம் வருகை, புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டும். புகையில்லா போகி பண்டிகை கொண்டாடி, சுற்றுச்சூழலை பேணிக்காப்போம், என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ