உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாநகராட்சி சொத்து வரி ரூ.464.71 கோடி வசூலித்து சாதனை

கோவை மாநகராட்சி சொத்து வரி ரூ.464.71 கோடி வசூலித்து சாதனை

கோவை : கோவை மாநகராட்சி நிர்வாகம், 27ம் தேதி வரை, சொத்து வரியாக ரூ.464.71 கோடி வசூலித்து, இலக்கை கடந்திருக்கிறது. இதற்கு மாமன்ற கூட்டத்தில், மேயர் ரங்கநாயகி, வாழ்த்து தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில் (2024-25) கோவை மாநகராட்சி, மார்ச் 31 வரை, ரூ.462.21 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 27ம் தேதி வரை, ரூ.464.71 கோடி வசூலித்து, இலக்கை தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.இதில், வடக்கு மண்டலம் - 92.12 சதவீதம், கிழக்கு - 91.30 சதவீதம், மேற்கு - 90.88 சதவீதம், மத்தியம் - 89.79 சதவீதம், தெற்கு மண்டலத்தில் 87.25 சதவீதம் என, மொத்தம் - 90.45 சதவீதம் சொத்து வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.சொத்து வரி வசூலில் வடக்கு மண்டலம் முதலிடத்திலும், தெற்கு மண்டலம் கடைசி இடத்திலும் இருக்கிறது. வரி வசூல் இலக்கை தாண்டியதால், நேற்று நடந்த மன்ற கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு, மேயர் ரங்கநாயகி பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ