உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு

தொண்டாமுத்தூர்: கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, 16 நாட்களுக்குப்பின் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த மாதம், கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த மாதம், 22ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். மழை குறைந்ததால், நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து சீரானது. நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, வனத்துறையினர் நீக்கினர். சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். நேற்று 450 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ