உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவின் பால் முகவர்கள் உரிமத்தை புதுப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல் 

ஆவின் பால் முகவர்கள் உரிமத்தை புதுப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல் 

கோவை: ஆவின் பால் முகவர்கள் தங்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள, கோவை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. கலெக்டர் அறிக்கை: கோயமுத்துார் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், 635 சில்லறை பால் விற்பனை முகவர்கள் மூலம், நுகர்வோர்களுக்கு பால் விற்கிறது. சில்லறை முகவர்களின் நலன் கருதி, பால் விற்பனை முகவர் உரிமம் புதுப்பித்து வழங்கப்படுகிறது. 635 முகவர்களில் இதுவரை, 333 பேர் புதுப்பித்துள்ளனர். புதுப்பிக்காத முகவர்கள் வரும் 10ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்காத முகவர்களுக்கு, பால், தயிருக்கான கமிஷன் தொகை செப்.11 முதல் வழங்கப்படாது. இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை