கல்லுாரியில் கிரிக்கெட் போட்டி
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் உள்ள, பொள்ளாச்சி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.இதில், 12 அணியினர் கலந்து கொண்டனர். அவ்வகையில், யுனைடெட் மற்றும் ஜாலிபிரண்ட்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில், ஜாலி பிரண்ட்ஸ் அணி முதலிடம், யுனைடெட் அணி இரண்டாமிடம், சங்கம் அணி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லுாரி டீன் முத்துசாமி, கோப்பையை வழங்கினார்.