மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். மேயர், கமிஷனர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் குடிநீர், ரோடு, வரியினங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த தேவைகள், குறைகள் மனுக்களாக முன்வைக்கப்படும். இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இன்று நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.