உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

சாலை விபத்தில் மூதாட்டி பலி

கோவை மாவட்டம் காரமடை தேரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி,68. இட்லி கடை வியாபாரம் செய்து வருகிறார். விஜயலட்சுமி தேரம்பாளையத்தில் மேட்டுப்பாளையம் - அன்னூர் ரோட்டை நேற்று முன் தினம் கடந்த போது, குன்னூரை சேர்ந்த ரியாஸ்கான், 23, ஓட்டி வந்த பைக் விஜயலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜயலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

---வங்கி அலுவலர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் தினேஷ், 32. இவர் தனியார் வங்கியில் அலுவலராகப் பணிபுரிந்து வந்தார்.நேற்று அதிகாலை 2:30 மணிக்கு அன்னூர் சத்தி ரோட்டில் காரில் செல்லும்போது கட்டுப்பாடு இழந்த கார் சாலையின் மையத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த தினேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி