உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மன் கோவில்களில்பக்தர்கள் வழிபாடு

அம்மன் கோவில்களில்பக்தர்கள் வழிபாடு

கோவை; ஆடிப்பெருக்கை ஒட்டி கோவையிலுள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பெரியகடைவீதியிலுள்ள கோனியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், பன்னீர் அபிஷேகம் நடந்தது. விளாங்குறிச்சி காமாட்சியம்மன் கோவில், உப்பிலிபாளையம் தண்டுமாரியம்மன் கோவில், புலியகுளம் மாரியம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன், அன்னபூர்னேஸ்வரி கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !