உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுரை -- திருச்சிக்கு நேரடி பஸ்; வால்பாறை மக்கள் கோரிக்கை

மதுரை -- திருச்சிக்கு நேரடி பஸ்; வால்பாறை மக்கள் கோரிக்கை

வால்பாறை; வால்பாறையிலிருந்து மதுரை, திருச்சிக்கு நேரடி அரசு பஸ் இயக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி, சேலம், திருப்பூர், மன்னார்காடு மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல், மதுரை மற்றும் திருச்சிக்கு நேரடி பஸ் இயக்க வேண்டும் என்பது பயணியரின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் கூறியதாவது: வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், திருச்சி, பழநி, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல, 64 கி.மீ., தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு சென்று, அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, வால்பாறையில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், மதுரை மற்றும் திருச்சிக்கு நேரடி பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை