மேலும் செய்திகள்
த.வீ.செ., பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
30-Sep-2025
கோவை: சூலுாரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 13 பேர், மாநில அளவிலான வாள்வீச்சு போட்டிக்கு, தகுதி பெற்றனர். கோவை இந்துஸ்தான் கலை, அறிவில் கல்லுாரியில், 14 குறுமையங்கள் அடங்கிய, கோவை வருவாய் மாவட்ட அளவில் வாள்வீச்சு போட்டி நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சூலுார் அப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 40 மாணவர்கள் பங்கேற்றனர். ஏழு தங்கம், 13 வெள்ளி, 35 வெண்கலம் என, 55 பதக்கங்கள் பெற்றனர். இதில், 13 பேர், ஜனவரி மாதம் நடக்கும், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை தலைமை ஆசிரியை அன்புச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.
30-Sep-2025