கோவில் சொத்துகளை அபகரிக்க தி.மு.க., அரசு சதி : ஹிந்து முன்னணி
திருப்பூர்: ஹிந்து முன்னணிமாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:: சட்டசபையில் ஒரே நாளில், 16 மசோதாக்களை விவாதமின்றி, நிறைவேற்றியது ஜனநாயக கேலிக்கூத்து. கோவில் இடங்களில் கல்லுாரி துவங்குவமற்காக, அறநிலையத்துறை சதி செய்து, தாக்கல் செய்த மசோதாவை அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்த்தார். அவரை ஹிந்து முன்னணி பாராட்டுகிறது. கோவில் சொத்துகள், நிதி, கோவில் இடங்கள் ஆகியவை கோவிலுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என பலமுறை நீதிமன்றம் கூறிய பிறகும், தி.மு.க., அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது, நீதிமன்ற அவமதிப்பு. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கோவில் நிதி, தங்கம் மற்றும் இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. விஞ்ஞானபூர்வ ஊழலில் கைதேர்ந்தது தி.மு.க., என நீதிபதி சர்க்காரியா தெரிவித்த கருத்து, இன்றும் பொருத்தமாக இருக்கிறது. கோவில் சொத்துகளை அழிக்கும் திட்டங்களை, மக்கள் நலன் என்ற போர்வையில் சட்டசபையில் தி.மு.க., அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை ஏற்க கூடாது என்று, ஹிந்து முன்னணியின் சட்டக்குழு, கவர்னர் ரவியை சந்தித்து மனு அளிக்கும். தி.மு.க., அரசின் இந்த சதியை, ஹிந்துக்கள் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும். ஹிந்து ஆன்மிக அமைப்புகள், ஆதீன மடாதிபதிகள் கண்டிக்க வேண்டும். இவ்வாறு, கூறியுள்ளார்.