உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  லாரி மீது வாகனம் மோதி டிரைவர் பலி

 லாரி மீது வாகனம் மோதி டிரைவர் பலி

போத்தனூர்: உடுமலை, புக்குளத்தை சேர்ந்தவர் சந்தியா, 26; கணவர் கனகராஜ். நேற்று அதிகாலை இவர் உடுமலையிலிருந்து கோவைக்கு பிக்-அப் வாகனத்தில் கோழி லோடுடன், பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். ஒத்தக்கால்மண்டபம் மேம்பாலத்தில் வரும்போது, லாரி ஒன்று நின்றிருந்தது. எதிர்பாராவிதமாக லாரி மீது பிக்-அப் வாகனம் மோதியது. இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். செட்டிபாளையம் போலீசார், சடலத்தை மீட்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பினர். லாரி டிரைவர் விஜயகுமாரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை