வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நாட்டுல வெப்ப நிலை மாறிவிட்டது. அனைத்து பேருந்துகளிலும் டிரைவர் கேபின் குளிர்சாதன வசதி செய்துதர வேண்டும். பேருந்து நிலையங்களில் சத்தான உணவு மற்றும் பழரசங்கள் சிறப்பு விலையில் தரவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணிமனைகளில் மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்.
இதய நோய் வந்திறந்தவர்கள் எல்லாம் கொரோனாவுக்கு தடுப்பூசி எடுத்தவர்களா. . கண்டுபுடியுங்க சாமி
நகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் முதல் நாள் மதியம் 12 மணிக்கு பேருந்தில் ஏறினால் மறுநாள் மதியம் 12 மணிக்கு பேருந்தில் இருந்து இறங்குகிறார்கள். இரவில் அலுவலகம் அல்லது கிடைத்த இடத்தில் ஓய்வு எடுக்கிறார்கள். இங்கு அவர்களுக்கு முறையான ஓய்வு கிடைப்பது இல்லை. ஆகவே பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஷிப்ட் நேர அளவை குறைத்து காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் ஷிப்ட் நேரம் வருமாறு குறைக்க வேண்டும். காலை ஷிப்ட் மாலை ஷிப்ட் மாறி மாறி கொடுக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தாருடன் உறங்கும் விதமாக அமைத்தல் நல்லது. முடியாவிட்டால் ஓய்வு அறை நன்கு பாரமரிக்கப்பட்டு வழங்க வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் கட்டாய விடுப்பு தர வேண்டும். ஒரு சில ஓட்டுனர் நடத்துனர்கள் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வேலை செய்து மொத்தமாக 4 நாட்கள் விடுப்பு எடுத்து செல்வது உண்டு. இது போன்ற விடுப்பு முறை தொடர்ச்சியாக வேலை செய்வது முற்றிலும் தடை செய்ய வேண்டும்.