உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் தரையிறங்கிய துபாய் விமானம்

கோவையில் தரையிறங்கிய துபாய் விமானம்

கோவை: துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம், மோசமான வானிலையால், கோவையில் தரையிறங்கியது. 3 மணி நேரத்துக்கு பின், மீண்டும் கோழிக்கோடு திரும்பியது.துபாயில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோழிக்கோடு வந்தது. மழை மேகம் சூழ்ந்த நிலையில், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க இயலவில்லை இதையடுத்து, கோவை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.கோவையில் காலை, 7:30 மணிக்கு தரையிறங்கிய விமானம், 3 மணி நேரம் காத்திருந்தது. வானிலை சீரானபின், 10:20 மணி அளவில் கோழிக்கோடு புறப்பட்டுச் சென்றது. அவ்விமானத்தில், 100 பயணிகள் பயணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ