உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்து வரும் பருவமழை பாசன விவசாயிகள் கவலை

குறைந்து வரும் பருவமழை பாசன விவசாயிகள் கவலை

வால்பாறை : வடகிழக்குப்பருவ மழை குறைந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் முதல் வடகிழக்குப்பருவ மழை துவங்கி தொடர்ந்து பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு குறைந்து வெயில் நிலவுகிறது.அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மழைப்பொழிவு குறைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 154.42 அடியாக சரிந்தது.இதே போல், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம், 118.65 நேற்று காலை, அடியாகவும், 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71.30 நேற்று காலை அடியாகவும் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ