உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதியவர் அடித்துக்கொலை; பிச்சைக்காரர் தலைமறைவு 

முதியவர் அடித்துக்கொலை; பிச்சைக்காரர் தலைமறைவு 

கோவை; கோவை, ஆர்.எஸ்.புரம்., காமராஜர்புரம் பகுதியில், சீனிவாசன்,60, சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். நேற்று காலை சீனிவாசன் தலையில் ரத்தக்காயத்துடன் சடலமாக கிடந்தார். சடலத்தின் அருகில், ரத்தக்கறையுடன் காணப்பட்ட கட்டை ஒன்றை கைப்பற்றி விசாரித்தனர். அதே பகுதியில் பிச்சை எடுத்து வந்த மதுரையை சேர்ந்த வேல்முருகன்,50, என்பவர், சீனிவாசனை கட்டையால் தாக்கி, கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் கூறியதாவது: சீனிவாசனும், வேல்முருகனும் ஒரே பகுதியில் பிச்சை எடுத்து வந்ததால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன் இருவரும் சண்டையிட்டதால், வேல்முருகனை வேறு இடத்துக்குச் செல்ல அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். சில தினங்களாக காணாமல் போயிருந்த வேல்முருகன், நேற்றிரவு (நேற்று முன்தினம்) திரும்பி வந்து துாங்கிக் கொண்டிருந்த சீனிவாசனை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். 'சிசிடிவி' காட்சியில், அவர் தாக்குவது பதிவாகியுள்ளது. தலைமறைவான சீனிவாசனை தேடி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ