உள்ளூர் செய்திகள்

கண் பரிசோதனை முகாம்

மேட்டுப்பாளையம் ;மேட்டுப்பாளையம் அஞ்சல் அலுவலகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தலைமை அஞ்சல் அலுவலர் நாகஜோதி, முகாமை துவக்கி வைத்தார். ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், அஞ்சல் அலுவலக பணியாளர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். அலுவலர் தவநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை