உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கதளி வாழை விலை உயர்வு விவசாயிகள் ஆறுதல்

 கதளி வாழை விலை உயர்வு விவசாயிகள் ஆறுதல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தென் திருப்பதி நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். தற்போது வாழைத்தார் அறுவடை சீசன் என்பதால், மண்டிக்கு, அதிகளவில் வாழைத்தார்கள், விற்பனைக்கு வருகின்றன. நேற்று அன்னூர், சத்தியமங்கலம், பவானிசாகர், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து, 4000 வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில், 28 வியாபாரிகள் பங்கேற்றனர். மண்டியில் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன் அதிகபட்சம், 25 ரூபாய்க்கும், கதளி அதிகபட்சம், 48 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரம் நேந்திரன், 30 ரூபாய்க்கும், கதளி, 40 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் நேந்திரன் கிலோவுக்கு ரூ.5 குறைவாகவும், கதளி கிலோவுக்கு ஏட்டு ரூபாய் விலை உயர்ந்தும் ஏலம் போனது. விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர். மற்ற வாழைத்தார்கள் ஏலம் போனதில், ஒரு தார் பூவன் அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், ரஸ்தாளி அதிகபட்சம், 700க்கும், தேன் வாழை, 800க்கும், செவ்வாழை அதிகபட்சம், 1200 ரூபாய்க்கும், மொந்தன், 450க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 300க்கும், பச்சை நாடன்,500 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் செவ்வாழை விலை, உயர்ந்து ஏலம் போனது. இத்தகவலை, வாழைத்தார் ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ