உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செவ்வாழை விலை சரிவு விவசாயிகள் அதிர்ச்சி

செவ்வாழை விலை சரிவு விவசாயிகள் அதிர்ச்சி

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், செவ்வாழை விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று, செவ்வாழை கிலோ, 40 முதல் 45 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோன்று, நேந்திரன் --- 55, கதளி --- 40, ரஸ்தாளி --- 50, சாம்பிராணி --- 50 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தை விட, செவ்வாழை -கிலோவுக்கு 40 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. மேலும், பூவன், ரஸ்தாளி மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் கிலோவுக்கு 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. நேந்திரன் வாழைத்தார் வரத்து இருந்தது, விலையும் அதிகரித்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது மழை பெய்ய துவங்கி இருப்பதால், வரும் நாட்களில் வாழை வரத்து அதிகரிக்கும். செவ்வாழை விலை சரிந்ததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வரும் வாரங்களில், வாழை வரத்து மேலும் அதிகரிக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ